Wednesday, 3 June 2009

என் தேவதைகள்.......பார்ட் 2

..... ..... அதுக்கப்புறம் பச்ச புள்ளைய கும்முனது 3 ஆவது அம்மா ....எனது பெரியம்மா அருணா .... ஆலடி அருணா யாருன்னா எல்லோருக்கும் தெரியும் .....ஆனா அடாவடி அடிதடி (பச்ச புள்ள ஸ்பெஷலிஸ்ட் ) அருணா தான் என்னோட பெரியம்மா ...ஆனா எங்கம்மா வைவிட கொஞ்சம் உயரத்துல சின்னவங்க .... கோபத்துல யாரும் முன்னாடி உக்கார முடியாது ...தொடைய பிடிச்சு கிள்ளுநாங்கன்னா பாதி சாப்பாடு தொடை வழியா ஓட்டை போட்டுக்கிட்டு வந்திடும் .....இதுல வயித்தில வேற சில சமயம் கோலம் போடுவாங்க.....எப்படா இந்த ரத்த காட்டேரிக்- கிட்டயிருந்து தப்பிப்போம்-னு இருக்கும்.... இவங்க பொழுதுபோக்கே எனக்கு சொல்லிதறறது தான் ...ஏன்னா அப்பா தானே துணி துவைக்கலன்னாலும் பச்ச புள்ளைய துவைக்கலாம்.... .... தான் 15 வருசத்துல படிச்சத பச்ச புள்ளைக்கு 15 நாளைக்குள்ள சொல்லித்தந்திடனும்னு ஒரு பேராசை..... இதெல்லாம் விட ஒருத்தார் இருந்தாரு அது என்னோட சின்ன மாமா ....இவருக்கு என் காத திருகி அம்பாரமா என்ன தூகுரதுல ஒரு அளவிலாத ஆனந்தம்...இவரு தேவதைங்க கூட்டத்துல சேர முடியாது எனவே இவர தள்ளி வைக்கலாம்.... சரி இந்த மூணு பேரும் என்ன தான் பண்ணாங்க? அவ்வாக்கு நான் எல்லாம் தெரிஞ்ச குஞ்சா இருக்கணும்னு ஆசை.... பெரியம்மாவுக்கு இங்கிலீஷ் பேசுற ...இல்ல இல்ல பொளந்து கட்டுற துரையாக்கனும்னு ஆசை.... அம்மாக்கு தான் ஒரே தடவ கூப்பிட்ட உடனே மகன் ஓடி வந்திடம்னு பேராசை.... சரி ஏன் இவங்கெல்லாம் இந்த்க்த பச்ச புள்ளைய புடிச்சு இந்த பாடா படுத்தினாங்க? இவ்வளவு ஆசைகளா ஏன் இந்த பச்ச புள்ள மேல திணிச்சாங்க?? அந்த பச்ச புள்ள என்ன அப்பிடி பாவம் பண்ணுச்சு? ஆங் ...அப்பிடி கேளுங்க !!! இப்ப தான் நம்ம கதாநாயகன் என்ட்ரி .... இந்த பச்ச புள்ள இருக்கானே இவன் ஒரு படு (அப்)பாவி .... கொஞ்சம் அவன பத்தி ....... பச்ச புள்ள அவ்வா பொறந்தது எப்பிடி ன்னு பச்ச புள்ளைக்கு தெரியாது ...ஆனா இறந்தது மட்டும் கண்டிப்பா தெரியும்..... டெய்லி ஈவ்னிங் கிருஷ்ண பரமாத்மா கிட்ட மனு போட்டு ஸ்கெட்ச் போட்டு தூக்க சொன்னதே பச்ச புள்ள தான்... அப்பவே பச்ச புள்ளைக்கு ஸ்கெட்ச் போட்டு பழக்கம்...???? (......அப்பிடி எல்லாம் நினைச்சுடாதிங்க....) அறியாத வயசு புரியாத மனசு ...... பயங்கரமான சுருசுறுப்பில்லாத அசமஞ்சம்... கறி தாளிகை பண்றதுக்கு ஓடி போயி கொத்தமல்லி கருவேப்பிலை வாங்கி வாடான்னா.....ஓஓஓஓஓஓடி போயி.... வாவாவாவாங்கி சாயந்திரத்துக்குள்ள வீட்டுக்கு வந்து சேந்துடுவான்....இடைல மாமா கடைல முறுக்கு வாங்கி .....எதாவது தெருஞ்சவங்க தெரியாதவங்க வீட்டுக்கு போயி வெள்ளம் வாங்கி ....தின்னு திமிரி ..விளையாண்டு ...கட்டிபுரண்டு ....வீடு வந்து சேர்றதுக்குள்ள அம்மா சீக்கிரமே (பார்த்திங்கள அநியாயத்த )....சமையல் பண்ணி சாப்பிட்டு ஏதோ பச்ச புள்ள தான் லேட் ன்ற மாதிரி அடிக்க விளக்கமார தூக்கிட்டு நிக்கும்.... பாவம் பச்ச புள்ள ..அம்மா தானே ன்னு அழுகாம அடி வாங்கி சமத்தா இருப்பான்/ பெரியம்மாவுக்கு பச்ச புள்ள ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடியே பச்ச புள்ளைக்கு எல்லா சொல்லி தந்துடனும்னு ஒரே பிடிவாதம்....அப்பாவும் பச்ச புள்ள சரி நம்ம பெரியம்மா தானே ன்னு எல்லாத்தையும் மண்டையில் ஏத்திக்கிட்டு திரும்பவும் கிள்லோ..அடியோ..வாங்க ரெடியாக இருப்பான்...... இப்பிடி அடி வாங்கி வாங்கி பச்ச புள்ளைக்கு கொஞ்சம் மரத்து போனது என்னவோ உண்மை தான் ......மண்டையில கொட்டு வாங்கி வாங்கி புத்தி மழுங்கி போனது என்னவோ தார்மீகம் தான்.... அதுக்கு மேல பச்ச புள்ளைக்கு நினைச்ச அழுவாச்சியா வரும் சமயத்துல........ எம்புட்டு ...கொட்டுப்பட்டு ...கட்டு போட்டு ...சிக்கி ....சின்னா பின்னமாகி ....அவங்க கஷ்டப்பட்டு சொல்லி குடுத்ததெல்லத்தையும் மறந்து தேமேன்னு எனக்கென்ன விருந்தோன்னு இருந்தத நினைச்சு ...... இவங்கெல்லாம் அன்னைக்கு அடிச்சு பிடிச்சு அஸ்திவாரம் போடலேன்னா இன்னைக்கு பச்ச புள்ள எங்கேயோ அமெரிக்கா-ல உக்காந்து அல்லோல் பட்டுக்கிட்டு இருந்திருக்கும்..... நல்ல வேளை....பொழச்சுக்கிடுச்சு.....(அமெரிக்கா தான் ....ஹி.....ஹி.....ஹி.....ஹி.....) ஆனா பச்ச புள்ளைக்கு லவ் மட்டும் பொசுக்குன்னு மூச்சுக்கு முன்னூறு தடவ வந்துடும்....இந்த ரேட் ல மட்டும் கோவம் வந்துருந்தா என்ன ஆகிருக்கும் ? நினைச்சாலே கதி கலங்குது..... முளைச்சு மூணு இலை கூட விடல ..அதுக்குள்ள பச்ச புள்ளைக்கு மூணு காதல்..... அடி யாத்தி ......டவுசரே இடுப்புல நிக்காத வயசுல 3 காதலா ? இது பெரிய ஜிக்கிலிஜெட்டா-ள்ள இருக்கு ? ஜிக்கிலி ஜெட்டுன்னா? ....... -- ---ஷமி( http://sudharsang.blogspot.com )

Tuesday, 2 June 2009

என் தேவதைகள் .....

ஒரே தம்பு சுதர்சனா !!! ஒரே சுதர்சனா !!! ஒரேஏஎஈயி சுதர்சனா ஆஆஆஆஆஆ !!! இது தான் என் முதல் அம்மா ....

முதல் மூன்று குரலுக்குள் நான் வந்ததாக சரித்திரமே இல்லை ....அதனால தான் இந்த மூணு டெம்போ-வுமே ஒன்னு பாசத்தோட கூப்பிட ...

ஒன்னு கெஞ்சலாக ...

ஒன்னு அதட்டி ( இல்ல மாரடைப்பால ) இந்த அம்மாக்களே இப்படி தாங்கற அளவுக்கு எங்க அம்மா மோசம் இல்ல...ஏன்ன என்னோட அம்மா கொஞ்சம் (உங்க அம்மாவ விட கொஞ்சமே கொஞ்சூனு) ஜாஸ்தி ஸ்பெஷல் ..... இந்திரான்னு கூப்பிடலாம் .....அம்மோய் ன்னு கூப்பிடலாம் .....எப்பிடி சொல்லி கூப்பிட்டாலும் ''ஏரா தம்புன்னு '' பாசத்தோட பதில் வரும்..... என்னடா கூப்பிடுறாதுல என்ன ஸ்பெஷல் ன்னா? அதுல இருக்குற பாசத்த பாருண்ணே ! அக்கா நீங்க பார்த்துட்டிங்களா? அய்யா நீங்க ?

உங்களுக்கு அந்த பாசம் தெரியாதுப்பு ஏன்னா அந்த பாசம் தெலுங்குல டிரன்சிலீட் பண்ணிருக்கு ...ஹி..ஹி...ஹி நினைவு தெரிஞ்ச முதல்ல இருந்து என்னோட முதல் அம்மா என்னோட முத அம்மா இல்ல !!! (அப்போ அதுக்கு முன்னாடி????) சும்மா பார்ட் டைம் ஜாப் தான் ...எப்பவாது வந்து ''நானு தார நீ அம்மா'' ன்னு பாசமழை போலிஞ்சுட்டு போவாங்க ....அந்த மழை-ல நனஞ்சு துவட்டிகுரதுக்குள்ள ஒரு வில்லி... அதுதான் என்னோடைய அப்போதைய டேம்போரரி அம்மா......அதாவது கதைப்படி ரெண்டாவது அம்மா . அவங்க தான் என்னோட அவ்வா !!!( ச்சே ச்சே இப்பிடி எல்லாம் அப்போ மரியாதை குடுத்ததே இல்ல ..குடும்பத்துக்குள்ள எதுக்கு மரியாதை ஃபார்மாலிடி எல்லாம் ??).. .... பச்ச புள்ள (நானு தான்) அவ்வா - வ வில்லன்குது? ..... ஏன்??? .... அது ஒரு பெருங்கதை ..... ஒரு சின்ன பிளாஷ்பாக் ..... காலைல 4 மணி ...டிங் டிங் டிங்.... எயந்துறு அஞ்சலி ...எயந்துறு சுதர்சனா -ல்லாம் இல்ல எட்டி ஒரு மிதி(கொஞ்சம் exaggaration) இல்லன்னா ஒரு கிள்ளு ...ஏனுன்னா நானு படுக்கைல உச்சா போயிருப்பேன்....(நான் என்ன பண்றது ..மை டியர் குட்டி சாத்தான் வந்து ஐ லவ் யு டா செல்லம்ம்னு சொல்லுச்சு ) எழுந்து குளிச்சு ( நாலு வயசு பச்ச புள்ளைங்க ) சுப்ரபாரதம் சொல்லி ...அந்த ஸ்ரீ ராமன துணைக்கு கூப்பிட்டு வாய்ப்பாடு சொல்லணும்...இதுக்கு முன்னாடி பல்ல விளக்கி விளக்காம குளிச்சும் குளிக்காம துண்ட கண்டிக்கிட்டு பால் வாங்க போனும் ....இதுல அந்த படுபாவி பால்காரன் ரெண்டே ரெண்டு மணி தான் அடிப்பான்.....மிஸ் ஆச்சு நான் பீஸ் தான்....... அதுக்கப்புறம் முன்னாடி உக்காந்துகிட்டு ஸ்லோகம் சொல்லணும் ....தமிழ் வருஷம்-தோட அத்தனை போரையும் மனப்பாடம் பண்ணனும் ...ஏ ஃபார் ஆப்பிள் ...பி ஃபார் பால் எல்லாம் இல்ல..... அதெல்லாம் ஏற்கனவே மூனாவது அம்மா சொல்லி குடுதுடுச்சு.....இத பார்ர்ரா கொடுமைய ன்னு நீங்க மூச்சு விடுறது கேக்குது .....பச்ச புள்ளைய கொடுமை கொடுமைன்னு கொனட்டுல கும்முனது இன்னும் ஞயாபகம் இருக்குதுங்க .... அதுக்கு தான் ஒரு ஆறுதலாக இருக்குமே ன்னு ஒங்க கிட்ட பகுந்துக்க வந்தேன் ..... போயி மூக சீந்திட்டு முகங்களுவிட்டு வர்றேன் .....